உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
புதைத்துக்கொண்டது ஏன்?
என்றாவது ஒரு நாள்
நம் காதல்
செத்துப்போகும் என்றுதானே!
முதலில் நாம் ஒன்றாக இருந்து
காதல் செய்தோம்
பின்னர் நீ அங்கிருந்தும்
நான் இங்கிருந்தும்
அதற்கு காரியம் செய்தோம்
உன் நினைவும் என் நினைவும்
வரும்போதெல்லாம்
அதற்கு திவசம் கொண்டாடுகிறோம்
ஒரு புதையலைப் போல பொக்கிஷமாய்
மனதிற்குள் பூட்டி பூஜிக்கிறோம்
வெட்கம்கெட்டு வெளிப்படையாய் திரிகிறது உடல்
என்னில் உன்னையும்
புதைத்துக்கொண்டது ஏன்?
என்றாவது ஒரு நாள்
நம் காதல்
செத்துப்போகும் என்றுதானே!
முதலில் நாம் ஒன்றாக இருந்து
காதல் செய்தோம்
பின்னர் நீ அங்கிருந்தும்
நான் இங்கிருந்தும்
அதற்கு காரியம் செய்தோம்
உன் நினைவும் என் நினைவும்
வரும்போதெல்லாம்
அதற்கு திவசம் கொண்டாடுகிறோம்
ஒரு புதையலைப் போல பொக்கிஷமாய்
மனதிற்குள் பூட்டி பூஜிக்கிறோம்
வெட்கம்கெட்டு வெளிப்படையாய் திரிகிறது உடல்
****************************************************

No comments:
Post a Comment