Sunday, August 1
Friday, December 25
நீ
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்
அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .......
***********************
என்ன மந்திரம் செய்தாய்
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?
***********************
காதல் கவிதை
இன்று அவள் கைவிட்ட பிறகு-உன்,
கையை தாங்கி பிடித்தது நானேதான்.
இப்படிக்கு,
சிகரெட்.
காதல் வலி
கண்களில் இருக்கும்
நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக.........
**********************************
உன் முத்தங்களை
உன் முத்தங்களை..
அது முத்தத்தை விழுங்கிவிட்டு
வெறும் சத்தத்தை அல்லவா தருகிறது!!
**********************************
உன் அழகு
உன்னை
நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் ,
ஆனால்
அந்த கண்ணாடியோ ,
உன்னை பார்த்து
தன்னை அழகு படுத்தி கொள்கிறது.
கொலுசு
கூடவர ஆசையின்றி
விழுந்த
உன் கொலுசுதான்
உன்னோடு
கூடவர
என் ஆசையை வளர்த்தது............
***********************
நிம்மதி
உலகமே இன்று வரை
தேடிக்கொண்டு இருக்கிறது.
- நிம்மதி
கோலம்
வாசலிலேயே படுத்துக் கிடக்கிறது
கோலம்........
********************************
மழைத் துளிகளே!
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா...?
உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்...?
ம்!...
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!
********************************
கனவு காணுங்கள்:
உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்..,
சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,
சிநேகா வந்தால் செத்து போவீர்கள்..,
அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,
ஆகையால் கனவு காணுங்கள்
காதலில் தவிக்கும் சந்தியாவை
பற்றி அல்ல...
கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...
ஜெய்ஹிந்த்...
******************************************
எங்கே நீ சொல்??
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட
நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.
எங்கே நீ சொல்........
***********************************
கோலம்போடுகிறாய்..?
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!
**********************
ரீல் கவிதை
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்,
நீ வாடினால் என் உயிரை விடுவேன் ,
நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்....!!!
**************************************
உனையே நினைவு படுத்துகின்றன
உனையே நினைவு படுத்துகின்றன..
உனை நினைஊட்டும் அனைத்தும் அழகாகின்றன!!
********************************
புதைந்த காதல்
என்னில் உன்னையும்
புதைத்துக்கொண்டது ஏன்?
என்றாவது ஒரு நாள்
நம் காதல்
செத்துப்போகும் என்றுதானே!
முதலில் நாம் ஒன்றாக இருந்து
காதல் செய்தோம்
பின்னர் நீ அங்கிருந்தும்
நான் இங்கிருந்தும்
அதற்கு காரியம் செய்தோம்
உன் நினைவும் என் நினைவும்
வரும்போதெல்லாம்
அதற்கு திவசம் கொண்டாடுகிறோம்
ஒரு புதையலைப் போல பொக்கிஷமாய்
மனதிற்குள் பூட்டி பூஜிக்கிறோம்
வெட்கம்கெட்டு வெளிப்படையாய் திரிகிறது உடல்
ஆறு குணங்கள்:
1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.
*************************
பதினாறு பேறுகள்:
1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.
*************************
வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:
1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சுகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.
*************************************************
Wednesday, December 23
Sunday, December 13
உன்னால் மட்டுமே முடியும்
எப்படி முடியும்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….
